திருஞானசம்பந்தர் தேவாரம் |
மூன்றாம் திருமுறை |
3.83 திருநல்லூர் - திருவிராகம் பண் - சாதாரி |
வண்டிரிய விண்டமலர் மல்குசடை தாழவிடை யேறிப்
பண்டெரிகை கொண்டபர மன்பதிய தென்பரத னயலே
நண்டிரிய நாரையிரை தேரவரை மேலருவி முத்தந்
தெண்டிரைகள் மோதவிரி போதுகம ழுந்திருந லூரே.
|
1 |
பல்வளரு நாகமரை யார்த்துவரை மங்கையொரு பாகம்
மல்வளர் புயத்திலணை வித்துமகி ழும்பரம னிடமாஞ்
சொல்வளரி சைக்கிளவி பாடிமட வார்நடம தாடச்
செல்வமறை யோர்கள்முறை யேத்தவள ருந்திருந லூரே.
|
2 |
நீடுவரை மேருவில தாகநிகழ் நாகம்அழ லம்பாற்
கூடலர்கள் மூவெயி லெரித்தகுழ கன்குலவு சடைமேல்
ஏடுலவு கொன்றைபுனல் நின்றுதிக ழுந்நிமல னிடமாஞ்
சேடுலவு தாமரைகள் நீடுவய லார்திருந லூரே.
|
3 |
கருகுபுரி மிடறர்கரி காடரெரி கைஅதனி லேந்தி
அருகுவரு கரியினுரி யதளர்பட அரவரிடம் வினவில்
முருகுவிரி பொழிலின்மணம் நாறமயி லாலமர மேறித்
திருகுசின மந்திகனி சிந்தமது வார்திருந லூரே.
|
4 |
பொடிகொள்திரு மார்பர்புரி நூலர்புனல் பொங்கரவு தங்கும்
முடிகொள்சடை தாழவிடை யேறுமுத லாளரவ ரிடமாம்
இடிகொள்முழ வோசையெழி லார்செய்தொழி லாளர்விழ மல்கச்
செடிகொள்வினை யகலமனம் இனியவர்கள் சேர்திருந லூரே.
|
5 |
புற்றரவர் நெற்றியொர்கண் ஒற்றைவிடை யூர்வரடை யாளஞ்
சுற்றமிருள் பற்றியபல் பூதம்இசை பாடநசை யாலே
கற்றமறை யுற்றுணர்வர் பற்றலர்கள் முற்றும்எயில் மாளச்
செற்றவர் இருப்பிடம் நெருக்குபுன லார்திருந லூரே.
|
6 |
பொங்கரவர் அங்கமுடன் மேலணிவர் ஞாலமிடு பிச்சை
தங்கரவ மாகவுழி தந்துமெய் துலங்கியவெண் ணீற்றர்
கங்கையர வம்விரவு திங்கள்சடை யடிகளிடம் வினவிற்
செங்கயல் வதிக்குதிகொ ளும்புனல தார்திருந லூரே.
|
7 |
ஏறுபுகழ் பெற்றதென் இலங்கயைவர் கோனையரு வரையிற்
சீறியவ னுக்கருளும் எங்கள்சிவ லோகனிட மாகுங்
கூறும்அடி யார்களிசை பாடிவலம் வந்தயரும் அருவிச்
சேறுகம ரானவழி யத்திகழ்த ருந்திருந லூரே.
|
8 |
மாலுமலர் மேலயனும் நேடியறி யாமையெரி யாய
கோலமுடை யானுணர்வு கோதில்புக ழானிடம தாகும்
நாலுமறை யங்கமுத லாறுமெரி மூன்றுதழ லோம்புஞ்
சீலமுடை யார்கள்நெடு மாடம்வள ருந்திருந லூரே.
|
9 |
கீறுமுடை கோவணமி லாமையிலொ லோவியத வத்தர்
பாறுமுடன் மூடுதுவ ராடையர்கள் வேடமவை பாரேல்
ஏறுமட வாளொடினி தேறிமுனி ருந்தவிட மென்பர்
தேறுமன வாரமுடை யார்குடிசெ யுந்திருந லூரே.
|
10 |
திரைகளிரு கரையும்வரு பொன்னிநில வுந்திருந லூர்மேல்
பரசுதரு பாணியை நலந்திகழ்செய் தோணிபுர நாதன்
உரைசெய்தமிழ் ஞானசம் பந்தனிசை மாலைமொழி வார்போய்
விரைசெய்மலர் தூவவிதி பேணுகதி பேறுபெரு வாரே.
|
11 |
திருச்சிற்றம்பலம் |